Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

இறைவனின் தூரிகையில்
வரையப்பட்ட துயரங்கள் நாங்கள்
குண்டு முழக்கங்களே எம் குழந்தைகளின்
தாலாட்டுப் பாடலாய்…

எமனிடம் குத்தகை பெற்று
எம்மவர்களை கொன்று குவித்த ஓர்
அரசாங்கம் இங்கே…

உரிமைகள் இழந்தோம்
உறவுகள் மறந்தோம்
உறைவிடம் துறந்தோம்
இழப்பதற் கொன்றுமில்லை
இனிமேலும்…

அழகான தேசம் தந்தவர்கள் அதில்
அமைதி தர மறந்ததேனோ?
தமிழனாய் பிறந்ததில்
தவறேதுமுண்டோ? விடிகிற
ஒவ்வொரு பொழுதும் விடியலைத்
தேடியே..

புன்னகைப் பூக்கள் பூத்துக்
குலுங்கும் என் பூங்காவனமே,
உன் உதட்டில் பூக்கும் பூக்களின்
வாசமே நிதமும் எனது சுவாசமாய்,
மூச்சுத் திணறிய போதே அறிந்தேன்
இன்று நீ நகைக்காத சேதியை!
பூக்களில் தேனை ருசிக்கும்
வண்டல்ல நான், உன் பூக்களை
பூசை செய்யும் பூசாரியாய்.

தனியே புலம்பித் தவித்த
இரவுகளில் உணர்ந்தேன்
உனது பிரிவை .

நீயின்றி உறக்கம் தொலைந்த
இரவுகள், புழுங்கியது உடல்
மட்டுமல்ல, உள்ளமும்தான்.

ஒளிர்ந்தன இரவுகள்
உன்னோடு இருக்கையில்,
இருண்ட இரவுகளாய்
எனை நீ பிரிகையில்.

பிரிதலில் வலியைத் தருகிறாய்
உன் பாலினமும் பெண்தானோ!
எவர் தொடவும் அனுமதிக்காத
நீயே என் கற்புக்கரசியாய்!
உனது பெயர் மின்சாரமாய்.

ஒரு இனிய காலைபொழுது, தொலைக்காட்சில் வரும் ராசி பலன்களை பார்த்த பின்பே மற்ற பணிகள், அன்று எனது ராசிக்கு மகிழ்ச்சியான செய்தியாக, அயல்நாட்டு பயணம் விரைவில் கூடும் என்ற செய்தியை கேட்டபோது என் மனசுக்குள் சிறு உற்ச்சாகம் , அலுவலகம் சென்றடைந்த எனக்கு இன்ப அதிர்ச்சியாக காத்திருந்தது அலுவலக பணிக்காக அயல்நாடு செல்லும் அந்த வாய்ப்பு. அண்டை மாநிலம் கூட சென்றிராத எனக்கு அயல்நாடென்பது பெரிய விஷயம். குறுகிய கால பயணம்தான் என்றாலும் அதற்கான ஏற்பாடுகளில் மும்மரமானேன், வலை தளங்களில் அங்கே பார்க்கவேண்டிய இடங்கள், கேளிக்கைக்கான இடங்களை தேடுவதிலே கழிந்தன என் அலுவலக மிட்ச நேரமும். போவது அரபு நாடு ஆகையால் வரும்போது வாங்கவேண்டிய பொருள் பட்டியலில் மார்டின் ஷர்ட்டும், கோடாலி தைலமும் இடம் பெற்றிருந்தது. பயணத்தின் போது விமானப் பணிபெண்களிடம் பழகுவதற்கான ஒத்திகையே என் குளியலறை கண்ணாடியில் தினமும். முந்தைய வாரம் அமெரிக்காவில் நடந்த விமான விபத்தில் 19 பேர் பலி என்ற செய்தி என்னுள் ஆயிரம் பயத்தை உண்டாக்கியது என்றால் அது மிகையல்ல.

எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது, குல தெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு, வழியனுப்ப வந்த நண்பர்களின் வாழ்த்துக்களுடன் விமானத்தளத்தில் நுழைந்ததும், என்னுல் பல மாற்றங்கள்! விமானத்தில் எனக்கான இருக்கையை அடைந்ததும், வழிமேல் விழி வைத்திருந்த விமானப் பணிப்பெண் என்னருகில், வார்த்தைகள் நாவில் நடனமாடியது. பல கனவுகளுடன் கண்ணயர்ந்த சிறிது நேரத்தில் “திருபரங்குன்றதில் நீ சிரித்தால் முருகா திருத்தனி மலை மீது எதிரொலிக்கும்” பாடல் என் காதுகளில், விமானம் கிளம்பும் போது பக்தி பாடல்கள் போடுகிறார்களே! என்ற வியப்புடன் மேலும் தொடர்ந்தபோது என் காதுகளில் விழுந்தது “சிம்ம ராசிக்கு இன்று மிகவும் கடினமான நாளென்று”. ஏதோ தவறு நடப்பதை உணர்ந்த நான் கண் விழித்தபோது மீண்டும் ஒலித்தது “திருபரங்குன்றதில் நீ சிரித்தால்..”, ஆம் நிறுத்தாமல் விட்ட எனது மொபைல் அலாரம். வாரிச்சுரிட்டி எழுந்த போது எனது அறை தொலைக்காட்சியில் ராசிபலன்கள் முடிந்து செய்திகள் ஓடிகொண்டிருந்தது…

என் கவிதைகளின் கற்பனை ஊற்றாய்
இருந்த நீ, இன்று என் கண்களில்
கண்ணீர் ஊற்றானதேனோ?
உயிரே நீதான் என்றிருந்த என்னை
உன் உறவே வேண்டாமென்பதேனோ?
கல்லுக்குள்ளும் ஈரம் உண்டென்பதை, உன்
கல் மனம் அறியாததேனோ?
உணர்வுகளை நீ புரிந்து கொள்ளாதபோது
உறக்கத்தில் என் உயிர்பிரிதலும் உத்தமம்தான்.
உயிர்க்கொல்லி நோயாய் உன் பெயர்
சேர்வதற்குள், உயிர் காக்கும் அருமருந்தாய்
என்னிடம் வந்துவிடு…

என் எண்ணங்களிலும் செயல்களிலும் உன்
தாக்கத்தை உணர்ந்தபோது உணர்ந்துகொண்டேன்
நான் காதல் வயப்பட்டதை.

அரும்பிய மீசையை முறுக்கிய நேரங்கள் அதிகம்
உன் நினைவில், நீ செல்லும் அரசு பேருந்தும் என்
அன்பை பெற்றிருப்பதில் ஆச்சர்யமொன்றுமில்லை.

கட்சிக் கொடிகளை காணும்போதெல்லாம் உன்
தாவணி நினைவுகள் என்னில் பட்டொளி
வீசித்தான் பறக்கிறது.

உன் கூந்தல்முடிந்த பூக்கள் சொல்லும்
நான் உன்னை சுவாசிப்பதை, உன்
மார்பணைந்த புத்தகம் சொல்லும்
நான் உன்னை நேசிப்பதை.

கட்டுண்ட விறகுகளாய் நான் உன்னில்
சுற்றி கட்டிய கயிறாய் உன் கூந்தல்!

நூறுமுறைகூட தூக்கில் தொங்குவேன்
எனை தாங்கும் கயிற் நீயாகும்போது,
மரணத்தையும் மண்டியிட்டு யேற்பேன்
சாயும் மடி உனதாகும்போது.

கண்ணாடி முன் பேசியதையெல்லாம் உன்
கண்முன்னால் பேசத்தான் ஆசை, உன்
கண்ணசைவிற்கான காத்திருப்புகளுடன்…..

வானமும் வறுமையில்!
கருவளையமாய் மேகங்கள்
சிந்திய கண்ணீராய்
மழை.

தாய்

கடவுள் இருக்குமிடம் கருவரையென்றால்
பத்து திங்கள் என்னைச் சுமந்த,
கருவறை கொண்ட நீயும்
என் கடவுளே.

அழகிற்கு அருஞ்சொற்பொருள் தேடியபோது
விடையாக வந்தவள் நீ.
சுனாமிகூட சுமார்தான் உன்
அழகுச் சுழலில் சிக்கியவனுக்கு.
தாஜ்மஹால் அழகென்றேன் உன்னழகை
காணாதவரை, தங்கமீனும் அழகென்றேன்
உன்னைக் காணும் வரை.
காமனுக்கும் காதல் பிறக்கும்
உன்னைக் கண்டால், கதிரவனுக்கும்
கண் கூசும் உன் கண்ணைக் கண்டால்.
அமுதசுரபி காணாத நான், கண்ட
அழகுச் சுரபியாய் நீ.
நான் விரும்பிய இசைக்கருவி உன்
வளையல்களும், கொலுசுகளுமென்றாள்
மீட்டத் துடிக்கும் இசையாய் என்றும் நீ.

மனம்

மனம் ஒரு குரங்கென்றார்கள்
நம்பவில்லை, பேருந்து நிறுத்தத்தில்
பெண்களை காணும் வரை.

குரங்கிலிருந்து பிறந்த மனிதனை
மீண்டும் குரங்காக்கியது, அவனது
நிலையில்லாத மனம்.

குரங்கிற்கும் ஒருநாள் கோவம்
வரும், மனமில்லா மனிதனோடு
ஒப்பிடுகையில்.

பழைய பதிவுகள் »